அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ﷺ கூறினார்கள்:
நரகவாசிகளில் இறுதியாக அதிலிருந்து வெளியேற்றப்படுபவரை நான் அறிவேன். ஒரு மனிதர் அதிலிருந்து தவழ்ந்தபடி வெளியே வருவார். அவரிடம் கூறப்படும்: "சென்று சொர்க்கத்தில் நுழைவீராக." அவர்கள் (நபியவர்கள்) கூறினார்கள்: அவர் சொர்க்கத்தில் நுழைவதற்காக அங்கு செல்வார், ஆனால் அங்குள்ள அனைத்து அறைகளையும் ஏற்கெனவே மற்றவர்கள் பிடித்துக்கொண்டிருப்பதைக் காண்பார். அவரிடம் கூறப்படும்: "நீர் அதில் (நரகத்தில்) இருந்த காலத்தை உமக்கு நினைவிருக்கிறதா?" அவர் கூறுவார்: "ஆம்." அவரிடம் கூறப்படும்: "ஏதேனும் ஒரு விருப்பத்தைக் கேளும்." அவரும் தன் விருப்பத்தைக் கூறுவார். அவரிடம் கூறப்படும்: "நீர் விரும்பியது உமக்கு உண்டு, மேலும் இவ்வுலகத்தைப் போல் பத்து மடங்கு (உலக வளங்களும்) உமக்கு உண்டு." அவர்கள் (நபியவர்கள்) கூறினார்கள்: அவர் கூறுவார்: "நீ அரசனாக இருந்துகொண்டு என்னை பரிகாசம் செய்கின்றாயா?" அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்களின் முன் பற்கள் தெரியும் அளவுக்கு சிரிப்பதை நான் பார்த்தேன்.