இஷா தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. அப்போது ஒரு மனிதர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! எனக்கு (தங்களிடம்) ஒரு தேவை உள்ளது" என்று கூறினார். மக்கள் அல்லது மக்களில் சிலர் தூக்கக் கலக்கத்திற்கு ஆளாகும் வரை, நபி (ஸல்) அவர்கள் (அவருடன் பேசுவதற்காக) எழுந்து அவருடன் இரகசியமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு அவர்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். அவர் (அறிவிப்பாளர்) உளூ பற்றிக் குறிப்பிடவில்லை.