அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஓர் ஆட்சியாளர் அல்லது ஒரு மனிதர் (தொழுகையில்) இருமுறை சலாம் கூறினார். (இதைக் கண்ட) அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், "இவர் இதை எங்கிருந்து கற்றுக்கொண்டார்? (சரியாக நபிவழியைப் பின்பற்றியுள்ளாரே!)" என்று கூறினார்கள்.