அபூ பர்ஸா (ரழி) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷா தொழுகையை நள்ளிரவு வரை தாமதப்படுத்துவதை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. மேலும், அத்தொழுகைக்கு முன் உறங்குவதையும், அதற்குப் பின் (உலக விஷயங்களைப்) பேசுவதையும் அவர்கள் விரும்பவில்லை."
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஃபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பின்னர் நான் அவரை (சையார் பின் ஸலாமாவை) மற்றொரு முறை சந்தித்தபோது, "அல்லது இரவின் மூன்றில் ஒரு பகுதி வரை (தாமதப்படுத்துவதை ஒரு பொருட்டாகக் கருதவில்லை)" என்று கூறினார்.