حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، قَالَ سَمِعْتُ أَبَا الشَّعْثَاءِ، جَابِرًا قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثَمَانِيًا جَمِيعًا وَسَبْعًا جَمِيعًا. قُلْتُ يَا أَبَا الشَّعْثَاءِ أَظُنُّهُ أَخَّرَ الظُّهْرَ وَعَجَّلَ الْعَصْرَ وَعَجَّلَ الْعِشَاءَ وَأَخَّرَ الْمَغْرِبَ. قَالَ وَأَنَا أَظُنُّهُ.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் எட்டு ரக்அத்களை (லுஹர் மற்றும் அஸர் தொழுகைகளை)ச் சேர்த்தும், ஏழு ரக்அத்களை (மஃரிப் மற்றும் இஷா தொழுகைகளை)ச் சேர்த்தும் தொழுதேன்.
(இதனை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூஅஷ்ஷஅஸா (ரஹ்) அவர்களிடம், அவர்களின் மாணவர் அம்ர் (ரஹ்) அவர்கள்,) "அபூஅஷ்ஷஅஸா அவர்களே! (நபி (ஸல்) அவர்கள்) லுஹரைத் தாமதப்படுத்தியும் அஸரை முன்கூட்டியும், இஷாவை முன்கூட்டியும் மஃரிபைத் தாமதப்படுத்தியும் தொழுதிருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்" என்று கூறினேன். அதற்கு அபூஅஷ்ஷஅஸா (ரஹ்) அவர்கள், "நானும் அவ்வாறே கருதுகிறேன்" என்று கூறினார்கள்.
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِالْمَدِينَةِ ثَمَانِيًا جَمِيعًا وَسَبْعًا جَمِيعًا أَخَّرَ الظُّهْرَ وَعَجَّلَ الْعَصْرَ وَأَخَّرَ الْمَغْرِبَ وَعَجَّلَ الْعِشَاءَ .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நான் நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவில், எட்டு (ரக்அத்களை - லுஹர் மற்றும் அஸர் தொழுகைகளை) ஒன்றாகவும், ஏழு (ரக்அத்களை - மஃரிப் மற்றும் இஷா தொழுகைகளை) ஒன்றாகவும் தொழுதேன். அவர்கள் லுஹரைத் தாமதப்படுத்தி அஸரை முற்படுத்தினார்கள்; மேலும் மஃரிபைத் தாமதப்படுத்தி இஷாவை முற்படுத்தினார்கள்."