அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிற்கு வந்தபோது, (அவர்கள் வந்ததும் செய்யும்) முதல் தவாஃபில் ஹஜருல் அஸ்வத் மூலையைத் தொட்டதும், ஏழு சுற்றுகளில் மூன்று சுற்றுகளில் விரைந்து நடந்ததை நான் பார்த்தேன்.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவின்போது தமது ஒட்டகத்தின் மீது (அமர்ந்திருந்தவாறு) கஃபாவை வலம் வந்து, (ஹஜருல் அஸ்வத் கல் பதிக்கப்பெற்ற) மூலையை ஒரு கைத்தடியால் தொட்டார்கள்.
ஸாலிம் (ரஹ்) அவர்கள் தமது தந்தை (இப்னு உமர் (ரலி)) மூலம் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கஅபாவின் மூலைகளில் கருப்புக்கல் (ஹஜருல் அஸ்வத்) மூலையையும், ஜுமஹிய்யீன் குலத்தவரின் வீடுகள் அமைந்துள்ள திசையில் அதற்கு அடுத்துள்ள (யமன்) மூலையையும் தவிர வேறெந்த மூலைகளையும் தொட்டதில்லை (இஸ்திலாம் செய்ததில்லை).
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ الْمِصْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، قَالَ لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَسْتَلِمُ مِنْ أَرْكَانِ الْبَيْتِ إِلاَّ الرُّكْنَ الأَسْوَدَ وَالَّذِي يَلِيهِ مِنْ نَحْوِ دُورِ الْجُمَحِيِّينَ .
ஸாலிம் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள், தம் தந்தை (அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி)) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கஃபாவின் மூலைகளில், கறுப்பு மூலையையும் (ஹஜருல் அஸ்வத் கல் உள்ள மூலை), அதற்கடுத்து பனூ ஜுமாஹ்வின் வீடுகளுக்கு நேராக உள்ள மூலையையும் (யமானி மூலை) தவிர மற்ற மூலைகளை இஸ்திலாம் செய்ததில்லை (தொட்டதில்லை).”