இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3516ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَنَسِ، بْنِ سِيرِينَ عَنْ مَعْبَدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قُلْتُ لَهُ سَمِعْتَهُ مِنْ أَبِي سَعِيدٍ، قَالَ نَعَمْ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ لاَ عَلَيْكُمْ أَنْ لاَ تَفْعَلُوا فَإِنَّمَا هُوَ الْقَدَرُ‏ ‏ ‏.‏
அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நீங்கள் அதைச் செய்யாவிட்டாலும் (அதாவது, 'அஸ்ல்' எனும் கருத்தடை முறையைச் செய்யாவிட்டாலும்) உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. ஏனெனில், அது (குழந்தை பிறப்பது என்பது அல்லாஹ்வால்) தீர்மானிக்கப்பட்ட விதியாகும்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح