இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3881ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا الْحَكَمُ بْنُ مُوسَى، حَدَّثَنَا هِقْلٌ، - يَعْنِي ابْنَ زِيَادٍ - عَنِ الأَوْزَاعِيِّ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ كَانَ لِرِجَالٍ فُضُولُ أَرَضِينَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ مَنْ كَانَتْ لَهُ فَضْلُ أَرْضٍ فَلْيَزْرَعْهَا أَوْ لِيَمْنَحْهَا أَخَاهُ فَإِنْ أَبَى فَلْيُمْسِكْ أَرْضَهُ ‏ ‏ ‏.‏
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் சிலரிடம் உபரியான நிலங்கள் இருந்தன. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தம்மிடம் உபரியான நிலம் வைத்திருப்பவர் அதைப் பயிரிடட்டும்; அல்லது தம் சகோதரருக்கு அதை (பயிரிடுவதற்காக) வழங்கட்டும். அவர் (அவ்வாறு வழங்க) மறுத்தால், தனது நிலத்தை அவரே வைத்துக்கொள்ளட்டும்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
3884ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا هَمَّامٌ، قَالَ سَأَلَ سُلَيْمَانُ بْنُ مُوسَى عَطَاءً فَقَالَ أَحَدَّثَكَ جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَزْرَعْهَا أَوْ لِيُزْرِعْهَا أَخَاهُ وَلاَ يُكْرِهَا ‏ ‏ ‏.‏ قَالَ نَعَمْ ‏.‏
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யாரிடம் நிலம் இருக்கிறதோ அவர் அதைத் தாமே பயிரிட வேண்டும்; அல்லது தம் சகோதரருக்கு அதைப் பயிரிடக் கொடுக்க வேண்டும். மேலும் அதனை வாடகைக்கு விடக்கூடாது."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح