இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்களிடமிருந்து (முந்தைய ஹதீஸைப்) போன்றே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும், உபைதுல்லாஹ்வின் அறிவிப்பில், (அவர்) "நான் நாஃபிஃவிடம், 'ஷிகார் என்றால் என்ன?' என்று கேட்டேன்" என்று இடம்பெற்றுள்ளது.
இப்னு உமர் (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கூறுவதாக அறிவித்தார்கள்:
"{யவ்ம யகூமுன் நாஸு லிரப்பில் ஆலமீன்} (அகிலங்களின் இறைவனுக்காக மக்கள் நிற்கும் நாளில்) (அதாவது, மறுமை நாளில்) அவர்களில் ஒருவர் தமது வியர்வையில் தமது காதுகளின் பாதிவரை மூழ்கி நிற்பார்."
இப்னுல் முஸன்னா அவர்களின் அறிவிப்பில், (குர்ஆன் வசனத்தின் தொடக்கமான) 'யவ்ம' (நாள்) என்ற சொல்லைக் குறிப்பிடாமல், 'யகூமுன் நாஸு' (மக்கள் நிற்பார்கள்) என்று (மட்டும்) வந்துள்ளது.