இந்த ஹதீஸ் இஸ்மாயீல் அவர்கள் வாயிலாக இதே அறிவிப்பாளர் தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. மர்வான் அவர்களின் ஹதீஸில், ''ஜரீர் (ரலி) அவர்களின் நற்செய்தியாளர் அபூ அர்தா ஹுஸைன் பின் ரபீஆ அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் (துல்கலஸா சிலைக்கோயிலை அழித்த வெற்றியின்) நற்செய்தியைக் கொண்டு வந்தார்'' என்று உள்ளது.