அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "எங்களில் ஒருத்திக்கு அவளது ஆடையில் மாதவிடாய்(க் கறை) பட்டால், அவள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவள் அதைச் சுரண்டிவிட வேண்டும்; பிறகு தண்ணீரைத் தொட்டுத் தேய்த்துக் கழுவ வேண்டும்; பிறகு அதன் மீது தண்ணீரைத் தெளித்து நனைக்க வேண்டும். பிறகு அவள் அதில் தொழலாம்" என்று பதிலளித்தார்கள்.
அஸ்மா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'எங்களில் ஒருவருடைய ஆடையின் மீது மாதவிடாய் இரத்தம் பட்டுவிட்டால், அவள் அதை எவ்வாறு செய்ய வேண்டும்?' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அவள் அதை சுரண்டி (நீக்க வேண்டும்), பிறகு அதைத் தண்ணீரில் தேய்த்து (கழுவ வேண்டும்), பிறகு அதன் மீது தண்ணீர் தெளிக்க வேண்டும், பின்னர் அதில் தொழுகை நிறைவேற்ற வேண்டும்.'