இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

243ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنِي سَلَمَةُ بْنُ شَبِيبٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَعْيَنَ، حَدَّثَنَا مَعْقِلٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَخْبَرَنِي عُمَرُ بْنُ الْخَطَّابِ، أَنَّ رَجُلاً، تَوَضَّأَ فَتَرَكَ مَوْضِعَ ظُفُرٍ عَلَى قَدَمِهِ فَأَبْصَرَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ ‏ ‏ ارْجِعْ فَأَحْسِنْ وُضُوءَكَ ‏ ‏ ‏.‏ فَرَجَعَ ثُمَّ صَلَّى ‏.‏
ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் அங்கசுத்தி (ஒளூ) செய்தார். அப்போது **தம் காலில்** ஒரு நகம் அளவுக்குரிய இடத்தைக் (கழுவாமல்) விட்டுவிட்டார். நபி (ஸல்) அவர்கள் அதைப் பார்த்து, “திரும்பிச் சென்று, உமது அங்கசுத்தியை (ஒளூவை) நன்கு செய்வீராக!” என்று கூறினார்கள். உடனே அவர் திரும்பிச் சென்று (நன்கு ஒளூ செய்துவிட்டுத்) தொழுதார்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح