حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ عَامِرٍ، عَنْ عُرْوَةَ بْنِ الْمُغِيرَةِ، عَنْ أَبِيهِ، قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ، فَأَهْوَيْتُ لأَنْزِعَ خُفَّيْهِ فَقَالَ دَعْهُمَا، فَإِنِّي أَدْخَلْتُهُمَا طَاهِرَتَيْنِ . فَمَسَحَ عَلَيْهِمَا.
முஃகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். (அப்போது) நான் அவர்களுடைய குஃப்ஃபுகளைக் கழற்றக் குனிந்தேன். அதற்கு அவர்கள், 'அவ்விரண்டையும் விட்டு விடு! ஏனெனில், நான் அவ்விரண்டையும் (கால்கள்) தூய்மையாக இருந்த நிலையில்தான் அணிந்தேன்' என்று கூறினார்கள். பிறகு அவற்றின் மீது மஸ்ஹு செய்தார்கள்."
உர்வா பின் அல்-முஃகீரா (ரஹ்) அவர்கள், தம் தந்தை (முஃகீரா ரழி) வழியாக அறிவிக்கிறார்கள்:
அவர் (முஃகீரா ரழி), நபி (ஸல்) அவர்களுக்கு உளூச் செய்ய உதவினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்து, தம் இரு காலுறைகள் மீதும் மஸஹ் செய்தார்கள். மேலும் அவரிடம், “நான் அவ்விரண்டையும் (என் கால்களை) தூய்மையான நிலையிலேயே (காலுறைகளுக்குள்) நுழைத்தேன்” என்று கூறினார்கள்.