அபூ கதாதா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் எவரும் சிறுநீர் கழிக்கும்போது தம் வலது கையால் தம் ஆண் குறியைப் பிடிக்கக் கூடாது; கழிவறையில் (மலம் கழித்த பின்) தம் வலது கையால் (அசுத்தத்தை) துடைத்துக்கொள்ளக் கூடாது; மேலும் (நீர் அருந்தும்) பாத்திரத்தில் (நேரடியாக) மூச்சு விடவும் கூடாது.”