அபூ கதாதா (ரழி) அவர்கள் தம் தந்தையார் (ரழி) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரும் சிறுநீர் கழிக்கும்போது தனது வலது கையால் ஆண் குறியைப் பிடிக்கக் கூடாது; அல்லது கழிவறையில் தனது வலது கையால் தன்னைத் துடைத்துக்கொள்ளக் கூடாது; மேலும் (தான் குடிக்கும்) பாத்திரத்தினுள் மூச்சு விடவும் கூடாது.