حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ عَامِرٍ، عَنْ عُرْوَةَ بْنِ الْمُغِيرَةِ، عَنْ أَبِيهِ، قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ، فَأَهْوَيْتُ لأَنْزِعَ خُفَّيْهِ فَقَالَ دَعْهُمَا، فَإِنِّي أَدْخَلْتُهُمَا طَاهِرَتَيْنِ . فَمَسَحَ عَلَيْهِمَا.
முஃகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். (அப்போது) நான் அவர்களுடைய குஃப்ஃபுகளைக் கழற்றக் குனிந்தேன். அதற்கு அவர்கள், 'அவ்விரண்டையும் விட்டு விடு! ஏனெனில், நான் அவ்விரண்டையும் (கால்கள்) தூய்மையாக இருந்த நிலையில்தான் அணிந்தேன்' என்று கூறினார்கள். பிறகு அவற்றின் மீது மஸ்ஹு செய்தார்கள்."
ஓர் இரவில் நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். அவர்கள், "உன்னிடம் தண்ணீர் இருக்கிறதா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். அவர்கள் தமது வாகனத்திலிருந்து இறங்கி, இரவின் இருளில் என்னிடமிருந்து மறையும் வரை சென்றார்கள். பிறகு வந்தார்கள். நான் அவர்கள் மீது பாத்திரத்திலிருந்து (தண்ணீரை) ஊற்றினேன். அவர்கள் தங்கள் முகத்தையும் கைகளையும் கழுவினார்கள். அவர்கள் மீது கம்பளியினாலான நீண்ட அங்கி (ஜுப்பா) ஒன்று இருந்தது. அதிலிருந்து அவர்களால் தமது முன்னங்கைகளை வெளியே எடுக்க முடியவில்லை. எனவே, அந்த அங்கியின் கீழ்ப்புறமாகத் தம் கைகளை வெளியே எடுத்து, தமது முன்னங்கைகளைக் கழுவினார்கள். பிறகு, தமது தலையை (ஈரக் கையால்) வருடினார்கள். பிறகு நான் அவர்களின் காலுறைகளைக் (குஃப்ஃபுகளைக்) கழற்றக் குனிந்தேன். அதற்கு அவர்கள், "அவ்விரண்டையும் விட்டுவிடு! ஏனெனில், கால்கள் இரண்டும் தூய்மையாக இருந்த நிலையில்தான் நான் அவற்றை அணிந்தேன்" என்று கூறி, அவற்றின் மீது மஸஹ் செய்தார்கள்.
நான் ஓர் இரவில் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். அவர்கள் என்னிடம், "உன்னிடம் தண்ணீர் இருக்கிறதா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். அவர்கள் தமது வாகனத்திலிருந்து இறங்கி, இரவின் இருளில் மறையும் வரை நடந்து சென்றார்கள். பிறகு வந்தார்கள். நான் பாத்திரத்திலிருந்து அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தமது முகத்தைக் கழுவினார்கள். அவர்கள் மீது கம்பளியாலான ஓர் அங்கி இருந்தது. அதிலிருந்து தமது முன்னங்கைகளை அவர்களால் வெளியே எடுக்க முடியவில்லை. ஆகவே, அவர்கள் அங்கியின் அடிப்பாகத்திலிருந்து அவ்விரண்டையும் வெளியே எடுத்து, தமது முன்னங்கைகளைக் கழுவி, தமது தலைக்கு மஸஹ் செய்தார்கள். பிறகு நான் அவர்களின் காலுறைகளைக் கழற்றுவதற்காகக் குனிந்தேன். அதற்கு அவர்கள், "அவ்விரண்டையும் விட்டுவிடு! ஏனெனில், நான் அவ்விரண்டையும் தூய்மையான நிலையிலேயே (காலுறைகளுக்குள்) நுழைத்தேன்" என்று கூறி, அவற்றின் மீது மஸஹ் செய்தார்கள்.