அபூ ஸயீத் அல்-குத்ரீ (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டு, பின்னர் (மீண்டும்) உறவு கொள்ள விரும்பினால், அவர் உளூ செய்ய வேண்டும்."
அபூ பக்ர் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், "அவ்விரண்டுக்கும் இடையில் ஒரு உளூ (செய்வது)" என்ற கூடுதல் வாசகம் இடம்பெற்றுள்ளது. மேலும் அவர், "(மீண்டும்) உறவு கொள்ள நாடினார்" என்று கூறினார்.
உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டு, பின்னர் மீண்டும் (அதே உறவை) நாடினால், அவ்(விரண்டு தாம்பத்திய உறவு)களுக்கும் இடையில் அவர் உளூச் செய்து கொள்ளட்டும்.
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ أَبِي سُفْيَانَ، طَرِيفٍ السَّعْدِيِّ ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ أَبِي سُفْيَانَ السَّعْدِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ مِفْتَاحُ الصَّلاَةِ الطُّهُورُ وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ .
அபூ ஸயீத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: "தொழுகையின் திறவுகோல் தூய்மையாகும். (தொழுகைக்கு வெளியே உள்ள செயல்களைத்) தடைசெய்வது தக்பீர் ஆகும். (தொழுகைக்கு வெளியே உள்ள செயல்களை மீண்டும்) அனுமதிக்கச் செய்வது தஸ்லீம் (ஸலாம் கூறுதல்) ஆகும்."