ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜனாபத் குளியல் செய்யும்போது, முதலில் தங்கள் கைகளைக் கழுவுவார்கள். பிறகு தங்கள் வலது கையால் இடது கையின் மீது (தண்ணீர்) ஊற்றி, தங்கள் மர்ம உறுப்பைக் கழுவுவார்கள். பிறகு தொழுகைக்குச் செய்வது போன்று உளூச் செய்வார்கள். பிறகு தண்ணீரை எடுத்து, தங்கள் விரல்களைத் தலைமுடியின் வேர்க்கால்களுக்குள் நுழைத்துக் கோதுவார்கள். தண்ணீர் (தலைமுடியின்) வேர்க்கால்களை அடைந்துவிட்டதை (மற்றும் சருமம் நன்கு நனைந்துவிட்டதை) உறுதிப்படுத்தியதும், தங்கள் தலையின் மீது மூன்று கைப்பிடி தண்ணீரை ஊற்றுவார்கள். பிறகு தங்கள் உடல் முழுவதும் தண்ணீர் ஊற்றுவார்கள். பின்னர் தங்கள் கால்களைக் கழுவுவார்கள்."