இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3221சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى الرَّازِيُّ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بَحِيرٍ، عَنْ هَانِئٍ، مَوْلَى عُثْمَانَ عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا فَرَغَ مِنْ دَفْنِ الْمَيِّتِ وَقَفَ عَلَيْهِ فَقَالَ ‏ ‏ اسْتَغْفِرُوا لأَخِيكُمْ وَسَلُوا لَهُ التَّثْبِيتَ فَإِنَّهُ الآنَ يُسْأَلُ ‏ ‏ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ بَحِيرُ بْنُ رَيْسَانَ ‏.‏
உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள், இறந்தவரை அடக்கம் செய்து முடித்ததும், அ(க்கப்ரு)க்கு அருகில் நின்று கொண்டு, “உங்கள் சகோதரருக்காக பாவமன்னிப்புக் கோருங்கள், அவருக்காக (கேள்வி பதிலில்) உறுதியைக் கேளுங்கள், ஏனெனில் அவர் இப்போது விசாரிக்கப்படுவார்” என்று கூறுவார்கள்.

அபூ தாவூத் கூறினார்கள்: அறிவிப்பாளர் புஹைரின் முழுப்பெயர் புஹைர் இப்னு ரைசான் ஆகும்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)