உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள், இறந்தவரை அடக்கம் செய்து முடித்ததும், அ(க்கப்ரு)க்கு அருகில் நின்று கொண்டு, “உங்கள் சகோதரருக்காக பாவமன்னிப்புக் கோருங்கள், அவருக்காக (கப்ரில் உள்ள கேள்வி பதிலின் போது) உறுதியைக் கேளுங்கள், ஏனெனில் அவர் இப்போது விசாரிக்கப்படுவார்” என்று கூறுவார்கள்.
அபூ தாவூத் கூறினார்கள்: (இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்) புஹைரின் முழுப்பெயர் புஹைர் இப்னு ரைசான் ஆகும்.