அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "ஸதகாவிலேயே மிகவும் சிறந்தது எது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள், "(வசதி) குறைந்தவர் (தன்னிடமுள்ளவற்றில்) சிரமப்பட்டு (தியாகத்துடன்) கொடுப்பது; மேலும், நீர் பொறுப்பேற்றுக்கொண்டவர்களிலிருந்து ஆரம்பம் செய்வீராக."