முஸ்லிம்களில் ஒருவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்தபோது அவர்களிடம் வந்தார். அவர் (நபியை) அழைத்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் விபச்சாரம் செய்துவிட்டேன்" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரைவிட்டு (முகத்தை) திருப்பிக்கொண்டார்கள். அவர் நகர்ந்து நபி (ஸல்) அவர்களுக்கு நேராக வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் விபச்சாரம் செய்துவிட்டேன்" என்று கூறினார். அம்மனிதர் நான்கு முறை இவ்வாறு கூறும் வரை நபி (ஸல்) அவர்கள் (அவரை விட்டும்) திரும்பிக்கொண்டார்கள். அவர் தனக்கு எதிராக நான்கு முறை சாட்சி கூறியபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை அழைத்து, "உனக்குப் பைத்தியமா?" என்று கேட்டார்கள். அவர், "இல்லை" என்றார். "நீ திருமணமானவனா (மற்றும் இல்லறம் நடத்தியவனா)?" என்று கேட்டார்கள். அவர் "ஆம்" என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவரைக் கொண்டுசென்று கல்லால் எறிந்து கொல்லுங்கள்" என்று கூறினார்கள்.