அபூ அய்யூப் அல்-அன்சாரி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒரு மனிதர் தம் முஸ்லிம் சகோதரரை மூன்று இரவுகளுக்கு மேல் புறக்கணிப்பது ஆகுமானதல்ல. (அவர்கள் சந்திக்கும்போது, ஒருவர் மற்றவரை விட்டும் தம் முகத்தைத் திருப்பிக்கொள்வதும், மற்றவர் இவரை விட்டும் தம் முகத்தைத் திருப்பிக்கொள்வதும் அவர்களுக்கு ஆகுமானதல்ல.) இவ்விருவரில் யார் முதலில் ஸலாம் கூறுகிறாரோ அவரே சிறந்தவர் ஆவார்."
அபூ அய்யூப் அன்சாரி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் தன் சகோதரருடன் மூன்று இரவுகளுக்கு மேல், சந்திக்கும்போது ஒருவன் ஒரு பக்கமும் மற்றவன் மறுபக்கமும் திரும்பிக்கொள்ளும் விதமாக பகைமை பாராட்டுவது கூடாது; இவ்விருவரில் சிறந்தவர், யார் முதலில் ஸலாம் கூறுகிறாரோ அவரே.