அபூ அய்யூப் அல்-அன்சாரி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு மனிதர் தம் சகோதரரை மூன்று இரவுகளுக்கு மேல் புறக்கணிப்பது (அல்லது அவருடன் பேசுவதைத் தவிர்ப்பது) ஆகுமானதல்ல. அவர்கள் இருவரும் சந்திப்பார்கள்; அப்போது இவர் (தம் முகத்தைத்) திருப்பிக் கொள்வார்; அவரும் (தம் முகத்தைத்) திருப்பிக் கொள்வார். இவ்விருவரில் யார் முதலில் ஸலாம் கூறுகிறாரோ அவரே சிறந்தவர் ஆவார்."
அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஸ்லிம் தன் சகோதரரை மூன்று இரவுகளுக்கு மேல் வெறுத்து ஒதுக்குவது (உறவைத் துண்டிப்பது) ஆகுமானதல்ல. இருவரும் சந்திக்கும்போது இவர் (ஒரு பக்கம்) திரும்பிக்கொள்வார்; அவரும் (மறுபக்கம்) திரும்பிக்கொள்வார். இவ்விருவரில் யார் முதலில் ஸலாமைத் துவங்குகிறாரோ அவரே சிறந்தவர்."