இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3004ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ، قَالَ سَمِعْتُ أَبَا الْعَبَّاسِ الشَّاعِرَ ـ وَكَانَ لاَ يُتَّهَمُ فِي حَدِيثِهِ ـ قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو ـ رضى الله عنهما ـ يَقُولُ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَاسْتَأْذَنَهُ فِي الْجِهَادِ فَقَالَ ‏"‏ أَحَىٌّ وَالِدَاكَ ‏"‏‏.‏ قَالَ نَعَمْ‏.‏ قَالَ ‏"‏ فَفِيهِمَا فَجَاهِدْ ‏"‏‏.‏
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஜிஹாதில் கலந்துகொள்ள அனுமதி கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அவரிடம், "உமது பெற்றோர் உயிருடன் இருக்கிறார்களா?" என்று கேட்டார்கள்.

அவர் "ஆம்" என்று பதிலளித்தார்.

நபி (ஸல்) அவர்கள் அவரிடம், "அப்படியானால், அவர்களுக்குப் பணிவிடை செய்வதில் நீ முனைப்பு காட்டு" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح