இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2365ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ عُذِّبَتِ امْرَأَةٌ فِي هِرَّةٍ حَبَسَتْهَا، حَتَّى مَاتَتْ جُوعًا، فَدَخَلَتْ فِيهَا النَّارَ ـ قَالَ فَقَالَ وَاللَّهُ أَعْلَمُ ـ لاَ أَنْتِ أَطْعَمْتِهَا وَلاَ سَقَيْتِهَا حِينَ حَبَسْتِيهَا، وَلاَ أَنْتِ أَرْسَلْتِيهَا فَأَكَلَتْ مِنْ خَشَاشِ الأَرْضِ ‏ ‏‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு பெண், ஒரு பூனையின் காரணமாக வேதனை செய்யப்பட்டாள். அப்பூனை பசியால் சாகும் வரை அவள் அதை அடைத்து வைத்திருந்தாள்; அதனால் அவள் நரகத்தில் நுழைந்தாள்.”

மேலும் (நபி (ஸல்) அவர்கள்) கூறினார்கள்: “(அல்லாஹ்வே மிக அறிந்தவன்!) ‘நீ அதை அடைத்து வைத்திருந்தபோது, அதற்கு நீ உணவளிக்கவுமில்லை; அதற்குத் தண்ணீர் புகட்டவுமில்லை; பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்பதற்காவது அதை நீ விடுவிக்கவுமில்லை’ (என்று அல்லாஹ் கூறினான்).”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح