இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2440ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ النَّاجِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ إِذَا خَلَصَ الْمُؤْمِنُونَ مِنَ النَّارِ حُبِسُوا بِقَنْطَرَةٍ بَيْنَ الْجَنَّةِ وَالنَّارِ، فَيَتَقَاصُّونَ مَظَالِمَ كَانَتْ بَيْنَهُمْ فِي الدُّنْيَا، حَتَّى إِذَا نُقُّوا وَهُذِّبُوا أُذِنَ لَهُمْ بِدُخُولِ الْجَنَّةِ، فَوَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم بِيَدِهِ لأَحَدُهُمْ بِمَسْكَنِهِ فِي الْجَنَّةِ أَدَلُّ بِمَنْزِلِهِ كَانَ فِي الدُّنْيَا ‏ ‏‏.‏ وَقَالَ يُونُسُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا شَيْبَانُ عَنْ قَتَادَةَ حَدَّثَنَا أَبُو الْمُتَوَكِّلِ‏.‏
அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“இறைநம்பிக்கையாளர்கள் (முஃமின்கள்) நரகத்திலிருந்து விடுபடும்போது, சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையிலுள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். அங்கு, இம்மையின்போது தங்களுக்குள் நிகழ்ந்த அநீதிகளுக்காக ஒருவருக்கொருவர் கணக்குத் தீர்த்துக்கொள்வார்கள். இறுதியில் அவர்கள் தூய்மைப்படுத்தப்பட்டுச் சுத்திகரிக்கப்பட்டதும், சொர்க்கத்தில் நுழைய அவர்களுக்கு அனுமதியளிக்கப்படும். முஹம்மதுவின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! அவர்களில் ஒருவர், இம்மையில் தம் வசிப்பிடத்தை அறிந்திருந்ததை விடத் தெளிவாகச் சொர்க்கத்திலுள்ள தம் வசிப்பிடத்தை அறிந்திருப்பார்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
6535ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنِي الصَّلْتُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، ‏{‏وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِمْ مِنْ غِلٍّ‏}‏ قَالَ حَدَّثَنَا سَعِيدٌ عَنْ قَتَادَةَ عَنْ أَبِي الْمُتَوَكِّلِ النَّاجِيِّ أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ يَخْلُصُ الْمُؤْمِنُونَ مِنَ النَّارِ، فَيُحْبَسُونَ عَلَى قَنْطَرَةٍ بَيْنَ الْجَنَّةِ وَالنَّارِ، فَيُقَصُّ لِبَعْضِهِمْ مِنْ بَعْضٍ، مَظَالِمُ كَانَتْ بَيْنَهُمْ فِي الدُّنْيَا، حَتَّى إِذَا هُذِّبُوا وَنُقُّوا أُذِنَ لَهُمْ فِي دُخُولِ الْجَنَّةِ، فَوَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لأَحَدُهُمْ أَهْدَى بِمَنْزِلِهِ فِي الْجَنَّةِ مِنْهُ بِمَنْزِلِهِ كَانَ فِي الدُّنْيَا ‏ ‏‏.‏
அபு ஸயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "முஃமின்கள் நரகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையிலான ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். உலகில் அவர்கள் ஒருவருக்கொருவர் இழைத்த அநீதிகளுக்காக, (அங்கு) அவர்களுக்கிடையே கணக்குத் தீர்க்கப்படும். இறுதியில் அவர்கள் தூய்மைப்படுத்தப்பட்டுப் புடமிடப்பட்டதும், சொர்க்கத்தில் நுழைய அவர்களுக்கு அனுமதியளிக்கப்படும். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! அவர்களில் ஒருவர் உலகில் தமது இல்லத்தை அறிந்திருந்ததை விட, சொர்க்கத்திலுள்ள தமது இருப்பிடத்தை மிகச் சரியாக அறிந்து வைத்திருப்பார்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح