இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2140ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، وَابْنُ أَبِي عُمَرَ، - وَاللَّفْظُ لِعَمْرٍو - قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ
مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، مَوْلَى آلِ طَلْحَةَ عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَتْ جُوَيْرِيَةُ اسْمُهَا
بَرَّةَ فَحَوَّلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم اسْمَهَا جُوَيْرِيَةَ وَكَانَ يَكْرَهُ أَنْ يُقَالَ خَرَجَ
مِنْ عِنْدِ بَرَّةَ ‏.‏ وَفِي حَدِيثِ ابْنِ أَبِي عُمَرَ عَنْ كُرَيْبٍ قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ‏.‏
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியான ஜுவைரியா (ரழி) அவர்களின் (முந்தைய) பெயர் பர்ரா (பக்தியுள்ளவர்) என்றிருந்ததாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரின் பெயரை ஜுவைரியா என்று மாற்றிவிட்டு (பின்வருமாறு) கூறினார்கள்: "அவர் பர்ரா (பக்தியுள்ளவர்) அவர்களிடமிருந்து புறப்பட்டுவிட்டார்" என்று சொல்லப்படுவதை நான் விரும்பவில்லை.

இப்னு அபீ உமர் (ரழி) அவர்கள் அறிவித்த ஹதீஸ் இதிலிருந்து சற்று வித்தியாசமாக உள்ளது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح