அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:
”ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிம் மீதுள்ள உரிமைகள் ஆறு ஆகும்.”
”அல்லாஹ்வின் தூதரே (ஸல்), அவைகள் யாவை?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் கூறினார்கள்:
”நீங்கள் அவரைச் சந்தித்தால், அவருக்கு ஸலாம் கூறுங்கள்; அவர் உங்களை அழைத்தால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள்; அவர் உங்களிடம் ஆலோசனை கேட்டால், அவருக்கு ஆலோசனை வழங்குங்கள்; அவர் தும்மி, ’அல்ஹம்துலில்லாஹ்’ என்று (கூறி அல்லாஹ்வைப் புகழ்ந்தால்), அவருக்கு ’யர்ஹமுகல்லாஹ்’ என்று கூறுங்கள்; அவர் நோய்வாய்ப்பட்டால் அவரை நலம் விசாரியுங்கள்; மேலும் அவர் இறந்துவிட்டால் அவரைப் பின்தொடர்ந்து செல்லுங்கள்.”