இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3302ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنِي قَيْسٌ، عَنْ عُقْبَةَ بْنِ عَمْرٍو أَبِي مَسْعُودٍ، قَالَ أَشَارَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدِهِ نَحْوَ الْيَمَنِ فَقَالَ ‏ ‏ الإِيمَانُ يَمَانٍ هَا هُنَا، أَلاَ إِنَّ الْقَسْوَةَ وَغِلَظَ الْقُلُوبِ فِي الْفَدَّادِينَ عِنْدَ أُصُولِ أَذْنَابِ الإِبِلِ، حَيْثُ يَطْلُعُ قَرْنَا الشَّيْطَانِ فِي رَبِيعَةَ وَمُضَرَ ‏ ‏‏.‏
உக்பா பின் அம்ர் அபூ மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யமன் நாட்டின் திசைக்குத் தம் கையால் சுட்டிக்காட்டி, “ஈமான் (நம்பிக்கை) யமன் தேசத்தைச் சார்ந்தது; இதோ இங்கே உள்ளது. அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக கடினச் சித்தமும், உள்ளங்களின் முரட்டுத் தன்மையும் ஒட்டகங்களின் வால்களின் அடிப்பாகத்தில் இருப்பவர்களான, (கால்நடைகளை ஓட்ட) கூச்சலிடுபவர்களிடம் உள்ளன. அங்குதான் ஷைத்தானின் இரு கொம்புகளும் தோன்றும். (இவர்கள்) ரபிஆ மற்றும் முளர் கோத்திரத்தாராவர்” என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
5303ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ وَأَشَارَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِيَدِهِ نَحْوَ الْيَمَنِ ‏ ‏ الإِيمَانُ هَا هُنَا ـ مَرَّتَيْنِ ـ أَلاَ وَإِنَّ الْقَسْوَةَ وَغِلَظَ الْقُلُوبِ فِي الْفَدَّادِينَ حَيْثُ يَطْلُعُ قَرْنَا الشَّيْطَانِ رَبِيعَةَ وَمُضَرَ ‏ ‏‏.‏
அபூ மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் யமன் நாட்டின் திசை நோக்கித் தமது கையால் சுட்டிக்காட்டி, "ஈமான் (நம்பிக்கை) இதோ இங்கே உள்ளது" என்று இருமுறை கூறினார்கள். "அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக இரக்கமற்ற தன்மையும், உள்ளங்களின் கடினத் தன்மையும் (ஒட்டகங்களை விரட்ட) கூச்சலிடுபவர்களிடத்தில்தான் உள்ளன; அங்குதான் ஷைத்தானின் இரு கொம்புகளும் உதிக்கின்றன; (அதாவது) ரபிஆ மற்றும் முழர் (ஆகிய குலத்தாரிடம் இக்குணங்கள் உள்ளன)" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح