இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1524சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ سَوَّادِ بْنِ الأَسْوَدِ بْنِ عَمْرٍو، قَالَ أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ مَا أَنْعَمْتُ عَلَى عِبَادِي مِنْ نِعْمَةٍ إِلاَّ أَصْبَحَ فَرِيقٌ مِنْهُمْ بِهَا كَافِرِينَ يَقُولُونَ الْكَوْكَبُ وَبِالْكَوْكَبِ ‏ ‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறினான்: நான் என் அடியார்களுக்கு எந்த அருட்கொடையையும் வழங்கினாலும், அவர்களில் ஒரு சாரார் அதைக் கொண்டு (எனக்கு நன்றி செலுத்தாமல், அருட்கொடையை எனக்குச் சாராமல்) நிராகரிப்பவர்களாக ஆகிவிடுகின்றனர். (அவர்கள்) 'நட்சத்திரத்தால் (இது நிகழ்ந்தது), நட்சத்திரத்தின் மூலமே (இது கிடைத்தது)' என்று கூறுகிறார்கள்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)