حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، عَنْ أَبِي ذَرٍّ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ لِي جِبْرِيلُ مَنْ مَاتَ مِنْ أُمَّتِكَ لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ، أَوْ لَمْ يَدْخُلِ النَّارَ، قَالَ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ قَالَ وَإِنْ .
அபூ தர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஜிப்ரீல் என்னிடம், ‘உமது சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காத நிலையில் யார் மரணிக்கிறாரோ, அவர் சொர்க்கத்தில் நுழைவார் (அல்லது நரக நெருப்பில் நுழைய மாட்டார்)’ என்று கூறினார்.”
“அவன் விபச்சாரம் செய்திருந்தாலும், திருடியிருந்தாலுமா?” என்று (நான்) கேட்டேன்.
அதற்கு அவர், “(ஆம்,) அப்படியிருந்தாலும்தான்” என்று கூறினார்கள்.
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! (சொர்க்கத்தையும் நரகத்தையும்) அவசியமாக்கும் இரண்டு காரியங்கள் எவை?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கு எதனையும் இணை வைக்காமல் மரணிப்பவர் சொர்க்கத்தில் நுழைவார்; அல்லாஹ்வுக்கு எதனையும் இணை வைத்து மரணிப்பவர் நரகத்தில் நுழைவார்" என்று பதிலளித்தார்கள்.
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதனை நான் செவியுற்றேன்: எவர் அல்லாஹ்வுக்கு எதனையும் இணை கற்பிக்காமல் அல்லாஹ்வை சந்தித்தாரோ, அவர் சொர்க்கத்தில் நுழைந்தார். மேலும், எவர் அல்லாஹ்வுக்கு (எதனையும்) இணை கற்பித்தவராக அல்லாஹ்வை சந்தித்தாரோ, அவர் நரக நெருப்பில் நுழைந்தார்.