حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي وَوَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ وَكِيعٌ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَالَ ابْنُ نُمَيْرٍ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ مَنْ مَاتَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ النَّارَ . وَقُلْتُ أَنَا وَمَنْ مَاتَ لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ .
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவர் அல்லாஹ்வுக்கு எதனையும் இணை கற்பித்த நிலையில் மரணிக்கிறாரோ, அவர் நரக நெருப்பில் நுழைவார்.”
நான் கூறுகிறேன்: “எவர் அல்லாஹ்வுக்கு எதனையும் இணை கற்பிக்காமல் மரணிக்கிறாரோ, அவர் சுவர்க்கத்தில் நுழைவார்.”
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! (சொர்க்கத்தையும் நரகத்தையும்) அவசியமாக்கும் இரண்டு காரியங்கள் எவை?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கு எதனையும் இணை வைக்காமல் மரணிப்பவர் சொர்க்கத்தில் நுழைவார்; அல்லாஹ்வுக்கு எதனையும் இணை வைத்து மரணிப்பவர் நரகத்தில் நுழைவார்" என்று பதிலளித்தார்கள்.