இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2672ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ ثَلاَثَةٌ لاَ يُكَلِّمُهُمُ اللَّهُ، وَلاَ يَنْظُرُ إِلَيْهِمْ وَلاَ يُزَكِّيهِمْ، وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ رَجُلٌ عَلَى فَضْلِ مَاءٍ بِطَرِيقٍ يَمْنَعُ مِنْهُ ابْنَ السَّبِيلِ، وَرَجُلٌ بَايَعَ رَجُلاً لاَ يُبَايِعُهُ إِلاَّ لِلدُّنْيَا، فَإِنْ أَعْطَاهُ مَا يُرِيدُ وَفَى لَهُ، وَإِلاَّ لَمْ يَفِ لَهُ، وَرَجُلٌ سَاوَمَ رَجُلاً بِسِلْعَةٍ بَعْدَ الْعَصْرِ، فَحَلَفَ بِاللَّهِ لَقَدْ أُعْطِيَ بِهِ كَذَا وَكَذَا، فَأَخَذَهَا ‏ ‏‏.‏
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மூன்று நபர்களிடம் அல்லாஹ் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் (பாவங்களிலிருந்து) தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
(1) பாதையில் தன்னிடம் உபரியாகத் தண்ணீர் இருந்தும், வழிப்போக்கருக்கு அதைத் தர மறுப்பவர்.
(2) உலக ஆதாயத்திற்காகவே ஒரு மனிதரிடம் விசுவாசப் பிரமாணம் செய்தவர்; அவர் இவர் நாடியதைக் கொடுத்தால் அவருக்குக் கட்டுப்பட்டு நடப்பார்; கொடுக்காவிட்டால் கட்டுப்படமாட்டார்.
(3) அஸ்ர் நேரத்திற்குப் பின் ஒரு சரக்கை விற்பதற்காக (மற்றொருவரிடம்) பேரம் பேசி, அப்பொருளுக்கு இவ்வளவு விலை தரப்பட்டதாக அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்ல, (அதை உண்மை என்று நம்பி) வாங்குபவர் அப்பொருளை வாங்கிக்கொள்கிறார்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح