நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனிடமிருந்து அறிவித்துக் கூறினார்கள்: "நிச்சயமாக அல்லாஹ் நற்செயல்களையும் தீயசெயல்களையும் எழுதினான்; பிறகு அதைத் தெளிவுபடுத்தினான். ஆகவே, ஒருவர் ஒரு நற்செயலைச் செய்ய எண்ணி, அதை அவர் செய்யாவிட்டால், அல்லாஹ் அதைத் தன்னிடம் ஒரு முழுமையான நற்செயலாகப் பதிவு செய்வான். அவர் அதைச் செய்ய எண்ணி, அதனைச் செய்துவிட்டால், அல்லாஹ் அதைத் தன்னிடம் பத்து நற்செயல்கள் முதல் எழுநூறு மடங்குகள் வரையிலும், இன்னும் பன்மடங்கு அதிகமாகவும் பதிவு செய்வான். மேலும், ஒருவர் ஒரு தீயசெயலைச் செய்ய எண்ணி, அதை அவர் செய்யாவிட்டால், அல்லாஹ் அதைத் தன்னிடம் ஒரு முழுமையான நற்செயலாகப் பதிவு செய்வான். அவர் அதைச் செய்ய எண்ணி, அதனைச் செய்துவிட்டால், அல்லாஹ் அதை ஒரேயொரு தீயசெயலாகப் பதிவு செய்வான்."
وعن أبي العباس عبد الله بن عباس بن عبد المطلب رضي الله عنهما، عن رسول الله، صلى الله عليه وسلم، فيما يروى عن ربه، تبارك وتعالى قال: إن الله كتب الحسنات والسيئات ثم بين ذلك: فمن همّ بحسنة فلم يعملها كتبها الله تبارك وتعالى عنده حسنة كاملة، وإن هم بها فعملها كتبها الله عشر حسنات إلى سبعمائه ضعف إلى أضعاف كثيرة، وإن هم بسيئة فلم يعملها كتبها الله عنده حسنة كاملة، وإن همّ بها فعملها كتبها الله سيئة واحدة ((متفق عليه)).
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், புகழுக்குரிய அல்லாஹ் கூறினான்: "நிச்சயமாக, அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் பதிவு செய்யுமாறு கட்டளையிட்டுள்ளான். பிறகு அதை (எவ்வாறு பதிவு செய்வது என்பதை) அவன் தெளிவாக விளக்கினான்: ஒருவர் ஒரு நற்செயலைச் செய்ய எண்ணி, அதைச் செய்யாமல் விட்டுவிட்டால், அல்லாஹ் அதை அவருக்கு ஒரு முழுமையான நன்மையாகப் பதிவு செய்கிறான். ஆனால், அவர் தனது எண்ணத்தைச் செயல்படுத்திவிட்டால், உயர்ந்தோனாகிய அல்லாஹ் அதை அவருக்குப் பத்து முதல் எழுநூறு மடங்காகவும், இன்னும் அதிகமாகவும் பதிவு செய்கிறான். ஆனால், ஒருவர் ஒரு தீய செயலைச் செய்ய எண்ணி, அதைச் செய்யாமல் விட்டுவிட்டால், அல்லாஹ் அதைத் தன்னிடம் ஒரு முழுமையான நன்மையாகப் பதிவு செய்கிறான். ஆனால், அவர் அதை எண்ணி, செய்துவிட்டால், அல்லாஹ் அதை ஒரேயொரு தீமையாகப் பதிவு செய்கிறான்".