அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள், "இரண்டு தோட்டங்கள், அவற்றின் பாத்திரங்களும் அவற்றில் உள்ளவையும் வெள்ளியால் ஆனவை; மேலும் இரண்டு தோட்டங்கள், அவற்றின் பாத்திரங்களும் அவற்றில் உள்ளவையும் தங்கத்தால் ஆனவை. மேலும், அத்ன் தோட்டத்தில் (சொர்க்கத்தில்) உள்ள மக்கள் தங்கள் இறைவனைக் காண்பதை, அவனது முகத்தின் மீதான மகத்துவத்தின் திரையைத் தவிர வேறு எதுவும் தடுக்காது."
அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "வெள்ளியால் ஆன இரண்டு சுவனங்கள்; அவற்றின் பாத்திரங்களும் மற்றும் அவற்றிலுள்ளவைகளும் (வெள்ளியால் ஆனவையே). தங்கத்தால் ஆன இரண்டு சுவனங்கள்; அவற்றின் பாத்திரங்களும் மற்றும் அவற்றிலுள்ளவைகளும் (தங்கத்தால் ஆனவையே). 'அத்ன்' எனும் சுவனத்தில் மக்கள் தங்கள் இறைவனைப் பார்ப்பதற்கும் அவர்களுக்குமிடையே, அவனது திருமுகத்தின் மீதுள்ள மகத்துவம் எனும் மேலாடையைத் தவிர வேறெதுவும் (தடையாக) இருக்காது."
அபூபக்ரு இப்னு கைஸ் அல்-அஷ்அரீ (ரழி) அவர்கள், தனது தந்தை (ரழி) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'இரண்டு தோட்டங்கள் வெள்ளியால் ஆனவை; அவற்றின் பாத்திரங்களும் அவற்றில் உள்ள அனைத்தும் (வெள்ளியால் ஆனவையே). மேலும் இரண்டு தோட்டங்கள் தங்கத்தால் ஆனவை; அவற்றின் பாத்திரங்களும் அவற்றில் உள்ள அனைத்தும் (தங்கத்தால் ஆனவையே). அத்ன் எனும் சுவனத்தில் (ஜன்னத் அத்ன்), பாக்கியமிக்கவனும், உயர்ந்தவனுமாகிய தங்கள் இறைவனை மக்கள் பார்ப்பதற்கும் அவர்களுக்கும் இடையில், அவன் முகத்தின் மீதிருக்கும் பெருமை எனும் திரையைத் தவிர வேறு எதுவும் இருக்காது.'