அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் ஏதோ ஒரு தேவைக்காக ஹஃப்ஸா (ரழி) அவர்களின் இல்லத்தின் கூரையின் மீது ஏறினேன்; அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஷாம் (சிரியா, ஜோர்டான், பாலஸ்தீனம் மற்றும் லெபனான் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதி) பகுதியை முன்னோக்கியவர்களாகவும், கிப்லாவைத் தமது முதுகுக்குப் பின்னால் ஆக்கியவர்களாகவும் இயற்கைக்கடனை நிறைவேற்றிக் கொண்டிருந்ததை நான் கண்டேன். (ஹதீஸ் எண் 147ஐக் காண்க).
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ وَاسِعِ بْنِ حَبَّانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ ارْتَقَيْتُ فَوْقَ بَيْتِ حَفْصَةَ، فَرَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْضِي حَاجَتَهُ، مُسْتَدْبِرَ الْقِبْلَةِ، مُسْتَقْبِلَ الشَّأْمِ.
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒருமுறை நான் ஹஃப்ஸா (ரழி) அவர்களின் இல்லத்தின் மேல் மாடிக்குச் சென்றபோது, நபி (ஸல்) அவர்கள் கிப்லாவிற்குப் புறங்காட்டியவர்களாகவும், ஷாமை முன்னோக்கியவர்களாகவும் இயற்கை உபாதையை நிறைவேற்றிக் கொண்டிருப்பதைக் கண்டேன்.
"நான் எங்கள் வீட்டின் கூரையின் மீது ஏறி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு செங்கற்களின் மீது பைத்துல் முகத்தஸை முன்னோக்கியவர்களாக மலஜலம் கழித்துக் கொண்டிருப்பதைக் கண்டேன்."
'அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் வீட்டின் கூரை மீது ஏறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மலம் கழிப்பதற்காக ஜெருசலத்தை (பைத்துல் மக்திஸை) முன்னோக்கி இரண்டு செங்கற்கள் மீது அமர்ந்திருந்ததை கண்டேன்.
"ஒரு நாள் நான் ஹஃப்ஸா (ரழி) அவர்களின் வீட்டின் மீது ஏறினேன், மேலும் நபி (ஸல்) அவர்கள் ஷாம் பகுதியை முன்னோக்கியவாறும், கஃபாவைத் தமது பின்பக்கமாகக் கொண்டவாறும் மலம் கழித்துக் கொண்டிருப்பதை நான் கண்டேன்."