இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

128சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ أَنْبَأَنَا الثَّوْرِيُّ، عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ الْمُلاَئِيِّ، عَنِ الْحَكَمِ بْنِ عُتَيْبَةَ، عَنِ الْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ، عَنْ شُرَيْحِ بْنِ هَانِئٍ، عَنْ عَلِيٍّ، - رضى الله عنه - قَالَ جَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِلْمُسَافِرِ ثَلاَثَةَ أَيَّامٍ وَلَيَالِيَهُنَّ وَيَوْمًا وَلَيْلَةً لِلْمُقِيمِ يَعْنِي فِي الْمَسْحِ ‏.‏
அலி (ரழி) அவர்கள் கூறினார்கள்:

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணிக்கு மூன்று பகல்களும் மூன்று இரவுகளும், உள்ளூரில் வசிப்பவருக்கு ஒரு பகலும் ஒரு இரவும் காலக்கெடுவை நிர்ணயித்தார்கள் - அதாவது, (குஃப்ஃபுகளின் மீது) மஸ்ஹு செய்வது தொடர்பாக."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
129சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ أَبِي مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنِ الْحَكَمِ، عَنِ الْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ، عَنْ شُرَيْحِ بْنِ هَانِئٍ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ - رضى الله عنها - عَنِ الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ فَقَالَتِ ائْتِ عَلِيًّا فَإِنَّهُ أَعْلَمُ بِذَلِكَ مِنِّي ‏.‏ فَأَتَيْتُ عَلِيًّا فَسَأَلْتُهُ عَنِ الْمَسْحِ فَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَأْمُرُنَا أَنْ يَمْسَحَ الْمُقِيمُ يَوْمًا وَلَيْلَةً وَالْمُسَافِرُ ثَلاَثًا ‏.‏
சுரைஹ் இப்னு ஹானி (ரழி) அவர்கள் கூறினார்கள்:

"நான் ஆயிஷா (ரழி) அவர்களிடம் குஃப்கள் மீது மஸ்ஹு செய்வது பற்றி கேட்டேன். அதற்கு அவர்கள், 'அலீ (ரழி) அவர்களிடம் செல்லுங்கள், ஏனெனில் அதுபற்றி என்னை விட அவர் அதிகம் அறிந்தவர்' என்றார்கள். எனவே நான் அலீ (ரழி) அவர்களிடம் சென்று (குஃப்கள் மீது) மஸ்ஹு செய்வது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உள்ளூரில் வசிப்பவருக்கு ஒரு பகல் ஓர் இரவும், பயணிக்கு மூன்று நாட்களும் (குஃப்கள் மீது) மஸ்ஹு செய்யுமாறு எங்களுக்குக் கூறுவார்கள்' என்று கூறினார்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
552சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، قَالَ سَمِعْتُ الْقَاسِمَ بْنَ مُخَيْمِرَةَ، عَنْ شُرَيْحِ بْنِ هَانِئٍ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ عَنِ الْمَسْحِ، عَلَى الْخُفَّيْنِ فَقَالَتِ ائْتِ عَلِيًّا فَسَلْهُ فَإِنَّهُ أَعْلَمُ بِذَلِكَ مِنِّي ‏.‏ فَأَتَيْتُ عَلِيًّا فَسَأَلْتُهُ عَنِ الْمَسْحِ فَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَأْمُرُنَا أَنْ نَمْسَحَ لِلْمُقِيمِ يَوْمًا وَلَيْلَةً وَلِلْمُسَافِرِ ثَلاَثَةَ أَيَّامٍ ‏.‏
ஷுரைஹ் பின் ஹானி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"நான் ஆயிஷா (ரழி) அவர்களிடம் தோலாலான காலுறைகள் மீது மஸஹ் செய்வது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அலீ (ரழி) அவர்களிடம் சென்று கேளுங்கள், ஏனெனில், அது பற்றி என்னை விட அவர்கள் அதிகம் அறிந்தவர்கள்' என்று கூறினார்கள். எனவே நான் அலீ (ரழி) அவர்களிடம் சென்று மஸஹ் செய்வது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'உள்ளூரில் தங்கியிருப்பவர் ஒரு பகலும் ஓர் இரவும், பயணி மூன்று நாட்களும் மஸஹ் செய்யலாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கூறுவார்கள்' என்று கூறினார்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)