ஜாபிர் பின் சமுரா (ரழி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையில் "வல்லைலி இதா யஃஷா"வையும், அஸர் தொழுகையில் அதைப் போன்றதையும், ஸுப்ஹுத் தொழுகையில் அதைவிட நீண்டதையும் ஓதுவார்கள்.
ஜாபிர் இப்னு ஸமுரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் சாய்ந்ததும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையைத் தொழுது, அதில் 'இரவு மூடிக்கொள்ளும் போது' (92) போன்ற அத்தியாயங்களையும், அஸர் தொழுகையிலும், அவர்கள் நீட்டித் தொழும் ஃபஜ்ர் தொழுகையைத் தவிர மற்ற தொழுகைகளிலும் அதுபோன்ற அத்தியாயங்களையே ஓதினார்கள்.