உம்மு ஹபீபா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"யார் கடமையான தொழுகைகள் அல்லாத, இரவிலும் பகலிலுமாக பன்னிரண்டு ரக்அத்கள் தொழுகிறாரோ, அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும்: லுஹருக்கு முன் நான்கு மற்றும் அதன்பின் இரண்டு ரக்அத்கள், அஸருக்கு முன் இரண்டு, மஃரிபுக்குப் பின் இரண்டு மற்றும் ஃபஜ்ருக்கு முன் இரண்டு."
உம்மு ஹபீபா (ரழி) அவர்கள் கூறினார்கள்: யார் கடமையான தொழுகைகளைத் தவிர (சுன்னத்தான தொழுகைகளாக), ஒரு பகலிலும் இரவிலும் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுகிறாரோ, அவருக்காக வல்லமையும் உயர்வும் மிக்க அல்லாஹ், சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுவான்.