உம்முல் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் போது உரையாற்றுவதை நான் கேட்டேன். அப்போது அவர்கள், "உங்களுக்கு ஒரு அடிமை (ஆட்சியாளராக) நியமிக்கப்பட்டு, அவர் உங்களை அல்லாஹ்வின் வேதத்தின்படி வழிநடத்தினால், நீங்கள் அவருக்குச் செவிசாய்த்துக் கீழ்ப்படியுங்கள்" என்று கூறினார்கள்.