அபூ ஸயீத் அல்-குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"பனீ இஸ்ராயீல் சமூகத்தைச் சேர்ந்த குள்ளமான ஒரு பெண் இருந்தாள். அவள் உயரமான இரண்டு பெண்களுடன் நடந்து சென்றாள். அவள் (தனது உயரத்தைக் கூட்டிக் காட்ட) மரத்தாலான காலணிகளை அமைத்துக் கொண்டாள். மேலும், மூடியுடன் கூடிய ஒரு தங்க மோதிரத்தைச் செய்து, அதனுள் கஸ்தூரியை நிரப்பினாள். கஸ்தூரி நறுமணங்களிலேயே மிகச் சிறந்ததாகும். பிறகு அவள் அவ்விரு பெண்களுக்கிடையே நடந்து சென்றாள். அவர்கள் அவளை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. (அப்போது நறுமணம் வீசுவதற்காக) அவள் தனது கையால் 'இப்படி' சைகை செய்தாள்."
(இதை அறிவித்த) ஷுஃபா அவர்கள் தம் கையை உதறிக் காட்டினார்கள்.