அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் (தஷஹ்ஹுத் இருப்பில்) அமரும்போது, தமது இடது காலைத் தமது வலது தொடைக்கும் கணுக்காலுக்கும் கீழே வைத்து, தமது வலது பாதத்தை நட்டு வைத்து, தமது இடது கையைத் தமது இடது முழங்காலின் மீதும், தமது வலது கையைத் தமது வலது தொடையின் மீதும் வைத்து, தமது ஆட்காட்டி விரலால் சுட்டிக் காட்டுவார்கள்.