حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ أَبَا مَعْبَدٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ أَخْبَرَهُ أَنَّ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ رَفْعَ الصَّوْتِ بِالذِّكْرِ حِينَ يَنْصَرِفُ النَّاسُ مِنَ الْمَكْتُوبَةِ كَانَ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَقَالَ ابْنُ عَبَّاسٍ كُنْتُ أَعْلَمُ إِذَا انْصَرَفُوا بِذَلِكَ إِذَا سَمِعْتُهُ.
அபூ மஅபத் (இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் விடுதலை செய்யப்பட்ட அடிமை) அவர்கள் அறிவித்தார்கள்: இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் என்னிடம் கூறினார்கள், “நபி (ஸல்) அவர்களின் காலத்தில் கடமையான ஜமாஅத் தொழுகைகளுக்குப் பிறகு அல்லாஹ்வின் திக்ரை உரக்கச் செய்வது வழக்கமாக இருந்தது.”
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் மேலும் கூறினார்கள், “நான் திக்ரை செவியுறும் போது, கடமையான ஜமாஅத் தொழுகை முடிந்துவிட்டது என்பதை நான் அறிந்துகொள்வேன்.”
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் கடமையான தொழுகையை முடித்தப் பிறகு, அல்லாஹ்வை திக்ரு செய்வதற்காக சப்தத்தை உயர்த்துவது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் வழக்கத்தில் இருந்தது.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: அவர்கள் தொழுகையை முடித்துவிட்டார்கள் என்பதை நான் அதைக் கொண்டு அறிந்துகொள்வேன்; மேலும் அதை (அல்லாஹ்வை திக்ரு செய்வதை) நான் செவியேற்பேன்.