கஅப் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
“நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து பகல் நேரத்திலன்றி (வேறெப்பொழுதும்) வருபவர்களாக இருக்கவில்லை.” அல்ஹஸன் (அறிவிப்பாளர்) அவர்கள், “(குறிப்பாக) முற்பகல் (ளுஹா) நேரத்தில்” என்று கூறினார்கள். ஆகவே, அவர்கள் ஒரு பயணத்திலிருந்து வந்தால் பள்ளிவாசலுக்குச் சென்று, அதில் இரண்டு ரக்அத்கள் (அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதமாக) தொழுது, பின்னர் அதிலேயே அமர்ந்து கொள்வார்கள்.