ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
விடியற்காலையானதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுதபோது, நான், 'அவற்றில் குர்ஆனின் தொடக்க அத்தியாயத்தை ஓதுகிறார்களா?' என்று (வினவும் அளவிற்கு மிகக் குறுகியதாக இருக்கும்)
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَنْبَأَنَا جَرِيرٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ إِنْ كُنْتُ لأَرَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي رَكْعَتَىِ الْفَجْرِ فَيُخَفِّفُهُمَا حَتَّى أَقُولَ أَقَرَأَ فِيهِمَا بِأُمِّ الْكِتَابِ
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத்களைத் தொழுவார்கள்; 'அவர்கள் அவ்விரண்டிலும் உம்முல் கிதாபை ஓதினார்களா?' என்று நான் சொல்லுமளவிற்கு அவர்கள் அவற்றை மிகவும் சுருக்கமாக ஆக்குவார்கள்."
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய தொழுகைக்கு முன்னர் இரண்டு ரக்அத்களை, 'அவற்றில் அவர்கள் சூரா அல்-ஃபாத்திஹாவை ஓதினார்களா?' என்று நான் கேட்கும் அளவிற்குச் சுருக்கமாகத் தொழுவார்கள்.