இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

873சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي قَبْلَ الظُّهْرِ رَكْعَتَيْنِ وَبَعْدَهَا رَكْعَتَيْنِ وَكَانَ يُصَلِّي بَعْدَ الْمَغْرِبِ رَكْعَتَيْنِ فِي بَيْتِهِ وَبَعْدَ الْعِشَاءِ رَكْعَتَيْنِ وَكَانَ لاَ يُصَلِّي بَعْدَ الْجُمُعَةِ حَتَّى يَنْصَرِفَ فَيُصَلِّيَ رَكْعَتَيْنِ ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹ்ருக்கு முன்னர் இரண்டு ரக்அத்களும், அதன் பின்னர் இரண்டு ரக்அத்களும் தொழுவார்கள். மஃக்ரிபுக்குப் பின்னர் தமது வீட்டில் இரண்டு ரக்அத்களும், இஷாவுக்குப் பின்னர் இரண்டு ரக்அத்களும் தொழுவார்கள். ஜும்ஆவுக்குப் பின்னர் (மஸ்ஜிதிலிருந்து) புறப்படும் வரை அவர்கள் தொழ மாட்டார்கள்; பின்னர் வீட்டில் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.