حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ أَشْعَثَ، قَالَ سَمِعْتُ أَبِي قَالَ، سَمِعْتُ مَسْرُوقًا، قَالَ سَأَلْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَىُّ الْعَمَلِ كَانَ أَحَبَّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتِ الدَّائِمُ. قَالَ قُلْتُ فَأَىَّ حِينٍ كَانَ يَقُومُ قَالَتْ كَانَ يَقُومُ إِذَا سَمِعَ الصَّارِخَ.
மஸ்ரூக் அறிவித்தார்கள்:
நான் ஆயிஷா (ரழி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பமான செயல் யாது?" என்று கேட்டேன். அவர்கள், "தொடர்ந்து செய்யப்படும் (நற்)செயல்" என்று கூறினார்கள். நான், "அவர்கள் (நபி (ஸல்) அவர்கள்) இரவில் (தஹஜ்ஜுத் தொழுகைக்காக) எந்த நேரத்தில் எழுவார்கள்?" என்று கேட்டேன். அவர்கள், "அவர்கள் (நபி (ஸல்) அவர்கள்) சேவல் கூவுவதைக் கேட்டதும் (இரவின் கடைசி மூன்றில் ஒரு பகுதியில்) எழுவார்கள்" என்று கூறினார்கள்.
"நான் ஆயிஷா (ரழி) அவர்களிடம் கேட்டேன்: 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பமான செயல் எது?' அவர்கள் கூறினார்கள்: 'தொடர்ந்து செய்யப்படும் செயலே.' நான் கேட்டேன்: 'இரவின் எந்தப் பகுதியில் அவர்கள் (ஸல்) கியாம் தொழுதார்கள்?' அவர்கள் கூறினார்கள்: 'சேவல் கூவுவதைக் கேட்டபோது.'"
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، ح وَحَدَّثَنَا هَنَّادٌ، عَنْ أَبِي الأَحْوَصِ، - وَهَذَا حَدِيثُ إِبْرَاهِيمَ - عَنْ أَشْعَثَ، عَنْ أَبِيهِ، عَنْ مَسْرُوقٍ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ - رضى الله عنها - عَنْ صَلاَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ لَهَا أَىُّ حِينٍ كَانَ يُصَلِّي قَالَتْ كَانَ إِذَا سَمِعَ الصُّرَاخَ قَامَ فَصَلَّى .
மஸ்ரூக் கூறினார்கள்:
நான் ஆயிஷா (ரழி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகையைப் பற்றி, "அவர்கள் இரவில் எந்த நேரத்தில் தொழுவார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "சேவல் கூவுவதை அவர்கள் கேட்டதும், எழுந்து தொழுவார்கள்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (புஹாரி, முஸ்லிம்) الصارخ என்ற வார்த்தையுடன் (அல்பானி)