وعن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم كان يصلي بالليل، وهي معترضة بين يديه، فإذا بقي الوتر، أيقظها فأوترت. ((رواه مسلم)).
وفي رواية له: فإذا بقي الوتر قال: قومي فأوتري يا عائشة
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் இரவில் (தஹஜ்ஜுத்) தொழுதுகொண்டிருக்கும்போது, ஆயிஷா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் (அவர்களின் தொழுகை திசையில்) குறுக்காகப் படுத்திருப்பார்கள். வித்ர் தொழுகை (மட்டும்) எஞ்சியிருக்கும்போது, நபி (ஸல்) அவர்கள் அவர்களை எழுப்புவார்கள்; உடனே அவர்கள் வித்ர் தொழுவார்கள்.
அதன் மற்றொரு அறிவிப்பில்: வித்ர் தொழுகை எஞ்சியிருக்கும்போது, "ஆயிஷாவே! எழுந்து வித்ர் தொழுவீராக!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.