நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "இரவுத் தொழுகை இரண்டிரண்டாக (தொழப்பட வேண்டியது). எனவே, வைகறை (ஃபஜ்ரு) நெருங்கிவிடுமோ என்று நீங்கள் அஞ்சினால், ஒரு (ரக்அத்) மூலம் அதை ஒற்றையாக ஆக்கிக்கொள்ளுங்கள். மேலும், உங்கள் தொழுகையின் கடைசித் தொழுகையை ஒற்றையாக ஆக்கிக்கொள்ளுங்கள்."