நான் இப்னு உமர் (ரழி) அவர்களிடம், "ஃபஜ்ர் (கட்டாயத்) தொழுகைக்கு முன்னுள்ள இரண்டு ரக்அத்களில் ஓதுவதை நீட்டுவது பற்றி உங்களின் கருத்து என்ன?" என்று கேட்டேன். அவர்கள் கூறினார்கள், "நபி (ஸல்) அவர்கள் இரவில் இரண்டு ரக்அத்கள், பின்னர் இரண்டு ரக்அத்கள் எனத் தொழுது, கடைசியாக ஒரு ரக்அத் வித்ர் தொழுது தொழுகையை முடிப்பார்கள். அவர்கள் அதானுக்குப் பிறகு உடனடியாக ஃபஜ்ர் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்." (துணை அறிவிப்பாளரான ஹம்மாத் அவர்கள் கூறினார்கள், "அதன் பொருள் (அவர்கள்) விரைவாக (தொழுதார்கள்) என்பதாகும்.")