அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அறிவித்தார்கள்:
"வெள்ளிக்கிழமையன்று ஒரு நேரம் உண்டு. அந்நேரத்தில் எந்த முஸ்லிமும் அல்லாஹ்விடம் நன்மையான எதையேனும் கேட்க, அதை அல்லாஹ் அவனுக்கு வழங்காமல் இருப்பதில்லை." மேலும் (அவர்கள்) கூறினார்கள்: "அது மிகக் குறுகிய நேரமாகும்."
وعن جابر رضي اللله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم ، يقول: إن في الليل لساعة، لا يوافقها رجل مسلم يسأل الله تعالى خيرًا من أمر الدنيا والآخرة، إلا أعطاه إياه، وذلك كل ليلة ((رواه مسلم)).
ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒவ்வோர் இரவிலும் ஒரு குறிப்பிட்ட நேரம் உண்டு. அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் இம்மை அல்லது மறுமை தொடர்பான எந்தவொரு நன்மையையும் அல்லாஹ்விடம் கேட்டால், அது அவருக்கு வழங்கப்படும்; மேலும் இந்த நேரம் ஒவ்வொரு இரவிலும் வருகிறது.”