இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1233ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ بُكَيْرٍ، عَنْ كُرَيْبٍ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، وَالْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ أَزْهَرَ ـ رضى الله عنهم ـ أَرْسَلُوهُ إِلَى عَائِشَةَ ـ رضى الله عنها ـ فَقَالُوا اقْرَأْ عَلَيْهَا السَّلاَمَ مِنَّا جَمِيعًا وَسَلْهَا عَنِ الرَّكْعَتَيْنِ بَعْدَ صَلاَةِ الْعَصْرِ وَقُلْ لَهَا إِنَّا أُخْبِرْنَا أَنَّكِ تُصَلِّينَهُمَا وَقَدْ بَلَغَنَا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْهَا‏.‏ وَقَالَ ابْنُ عَبَّاسٍ وَكُنْتُ أَضْرِبُ النَّاسَ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ عَنْهُمَا‏.‏ فَقَالَ كُرَيْبٌ فَدَخَلْتُ عَلَى عَائِشَةَ ـ رضى الله عنها ـ فَبَلَّغْتُهَا مَا أَرْسَلُونِي‏.‏ فَقَالَتْ سَلْ أُمَّ سَلَمَةَ‏.‏ فَخَرَجْتُ إِلَيْهِمْ فَأَخْبَرْتُهُمْ بِقَوْلِهَا فَرَدُّونِي إِلَى أُمِّ سَلَمَةَ بِمِثْلِ مَا أَرْسَلُونِي بِهِ إِلَى عَائِشَةَ‏.‏ فَقَالَتْ أُمُّ سَلَمَةَ ـ رضى الله عنها ـ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَنْهَى عَنْهَا ثُمَّ رَأَيْتُهُ يُصَلِّيهِمَا حِينَ صَلَّى الْعَصْرَ، ثُمَّ دَخَلَ عَلَىَّ وَعِنْدِي نِسْوَةٌ مِنْ بَنِي حَرَامٍ مِنَ الأَنْصَارِ فَأَرْسَلْتُ إِلَيْهِ الْجَارِيَةَ فَقُلْتُ قُومِي بِجَنْبِهِ قُولِي لَهُ تَقُولُ لَكَ أُمُّ سَلَمَةَ يَا رَسُولَ اللَّهِ سَمِعْتُكَ تَنْهَى عَنْ هَاتَيْنِ وَأَرَاكَ تُصَلِّيهِمَا‏.‏ فَإِنْ أَشَارَ بِيَدِهِ فَاسْتَأْخِرِي عَنْهُ‏.‏ فَفَعَلَتِ الْجَارِيَةُ فَأَشَارَ بِيَدِهِ فَاسْتَأْخَرَتْ عَنْهُ فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏ ‏ يَا بِنْتَ أَبِي أُمَيَّةَ سَأَلْتِ عَنِ الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ وَإِنَّهُ أَتَانِي نَاسٌ مِنْ عَبْدِ الْقَيْسِ فَشَغَلُونِي عَنِ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ بَعْدَ الظُّهْرِ فَهُمَا هَاتَانِ ‏ ‏‏.‏
குரைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி), மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) மற்றும் அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஹர் (ரலி) ஆகியோர் என்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் அனுப்பினார்கள். (அவர்கள் என்னிடம்) "எங்கள் அனைவரின் சார்பாக அவர்களுக்கு சலாம் சொல்; அஸ்ர் தொழுகைக்குப் பின்னுள்ள இரண்டு ரக்அத்களைப் பற்றி அவரிடம் கேள்; 'நீங்கள் அவ்விரண்டையும் தொழுவதாக எங்களுக்குச் செய்தி எட்டியது. ஆனால், நபி (ஸல்) அவர்கள் அதைத் தடுத்துள்ளார்கள் என எங்களுக்குச் செய்தி கிடைத்துள்ளது' என்று அவர்களிடம் கூறு" (என்று பணித்தார்கள்). மேலும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடன் சேர்ந்து நானும் மக்களில் யார் அதைத் தொழுதாலும் அவர்களை (அதைத் தொழுவதிலிருந்து தடுப்பதற்காக) அடிப்பவனாக இருந்தேன்" என்றும் கூறினார்கள்.

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, அவர்கள் என்னை அனுப்பி வைத்த செய்தியைத் தெரிவித்தேன். அதற்கு ஆயிஷா (ரலி), "உம்மு ஸலமாவிடம் கேள்" என்று கூறிவிட்டார்கள். நான் அவர்களிடம் (என்னை அனுப்பியவர்களிடம்) வெளியேறி வந்து, ஆயிஷா (ரலி) கூறியதைத் தெரிவித்தேன். உடனே அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் என்ன சொல்லி அனுப்பினார்களோ அதே விஷயத்தைக் கொடுத்து என்னை உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் அனுப்பினார்கள்.

அதற்கு உம்மு ஸலமா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
"நபி (ஸல்) அவர்கள் அதைத் தடுப்பதை நான் கேட்டிருக்கிறேன். பின்னர் அவர்கள் அஸ்ர் தொழுத பின் (என் வீட்டிற்கு) வந்தபோது அவ்விரண்டு ரக்அத்களையும் தொழுவதை நான் கண்டேன். அப்போது என்னிடம் பனூ ஹராம் குலத்தைச் சேர்ந்த அன்சாரிப் பெண்கள் சிலர் இருந்தனர். உடனே நான் (என்) பணிப்பெண்ணை அவரிடம் (நபி (ஸல்) அவர்களிடம்) அனுப்பி, 'நீ அவர் அருகே நின்று, "உம்மு ஸலமா உங்களுக்குச் சொல்கிறார்கள்: இறைத்தூதர் அவர்களே! தாங்கள் இதைத் தடுப்பதை நான் செவியுற்றிருக்கிறேன். ஆனால், தாங்களே இதைத் தொழுவதை நான் பார்க்கிறேனே!" என்று கூறு. அவர் தம் கையால் சைகை செய்தால் அவரிடமிருந்து விலகிவிடு' என்று சொன்னேன்.

அப்பெண்ணும் அவ்வாறே செய்தார். நபி (ஸல்) அவர்கள் கையால் சைகை செய்யவே, அப்பெண் அவரிடமிருந்து விலகிவிட்டார். நபி (ஸல்) அவர்கள் (தொழுகையை முடித்துத்) திரும்பியதும், "அபூ உமைய்யாவின் மகளே! அஸ்ருக்குப் பின்னுள்ள இரண்டு ரக்அத்கள் பற்றிக் கேட்டாய். அப்துல் கைஸ் கூட்டத்தார் என்னிடம் வந்ததால் லுஹ்ருக்குப் பின்னுள்ள இரண்டு ரக்அத்களைத் தொழவிடாமல் என்னை அலுவலில் ஆழ்த்திவிட்டனர். அந்த இரண்டு ரக்அத்களே இவை (இப்போது நான் தொழுதது)" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
4370ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو،‏.‏ وَقَالَ بَكْرُ بْنُ مُضَرَ عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ بُكَيْرٍ، أَنَّ كُرَيْبًا، مَوْلَى ابْنِ عَبَّاسٍ حَدَّثَهُ أَنَّ ابْنَ عَبَّاسٍ وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ أَزْهَرَ وَالْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ أَرْسَلُوا إِلَى عَائِشَةَ ـ رضى الله عنها ـ فَقَالُوا اقْرَأْ عَلَيْهَا السَّلاَمَ مِنَّا جَمِيعًا، وَسَلْهَا عَنِ الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ، وَإِنَّا أُخْبِرْنَا أَنَّكِ تُصَلِّيهَا، وَقَدْ بَلَغَنَا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْهَا، قَالَ ابْنُ عَبَّاسٍ وَكُنْتُ أَضْرِبُ مَعَ عُمَرَ النَّاسَ عَنْهُمَا‏.‏ قَالَ كُرَيْبٌ فَدَخَلْتُ عَلَيْهَا، وَبَلَّغْتُهَا مَا أَرْسَلُونِي، فَقَالَتْ سَلْ أُمَّ سَلَمَةَ‏.‏ فَأَخْبَرْتُهُمْ، فَرَدُّونِي إِلَى أُمِّ سَلَمَةَ بِمِثْلِ مَا أَرْسَلُونِي إِلَى عَائِشَةَ، فَقَالَتْ أُمُّ سَلَمَةَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَنْهَى عَنْهُمَا، وَإِنَّهُ صَلَّى الْعَصْرَ ثُمَّ دَخَلَ عَلَىَّ وَعِنْدِي نِسْوَةٌ مِنْ بَنِي حَرَامٍ مِنَ الأَنْصَارِ، فَصَلاَّهُمَا، فَأَرْسَلْتُ إِلَيْهِ الْخَادِمَ فَقُلْتُ قُومِي إِلَى جَنْبِهِ فَقُولِي تَقُولُ أُمُّ سَلَمَةَ يَا رَسُولَ اللَّهِ أَلَمْ أَسْمَعْكَ تَنْهَى عَنْ هَاتَيْنِ الرَّكْعَتَيْنِ فَأَرَاكَ تُصَلِّيهِمَا‏.‏ فَإِنْ أَشَارَ بِيَدِهِ فَاسْتَأْخِرِي‏.‏ فَفَعَلَتِ الْجَارِيَةُ، فَأَشَارَ بِيَدِهِ، فَاسْتَأْخَرَتْ عَنْهُ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏ ‏ يَا بِنْتَ أَبِي أُمَيَّةَ، سَأَلْتِ عَنِ الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ، إِنَّهُ أَتَانِي أُنَاسٌ مِنْ عَبْدِ الْقَيْسِ بِالإِسْلاَمِ مِنْ قَوْمِهِمْ، فَشَغَلُونِي عَنِ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ بَعْدَ الظُّهْرِ، فَهُمَا هَاتَانِ ‏ ‏‏.‏
புகைர் அவர்கள் அறிவித்தார்கள்:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான குறைப் அவர்கள், இப்னு அப்பாஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஹர் (ரலி), மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) ஆகியோர் தம்மை ஆயிஷா (ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்ததாகத் தெரிவித்தார்கள். அவர்கள் (குறைப் அவர்களிடம்), "எங்கள் அனைவரின் சலாமை அவர்களுக்குத் தெரிவி. அஸர் தொழுகைக்குப் பின்னுள்ள இரண்டு ரக்அத்கள் குறித்து அவரிடம் கேள். 'தாங்கள் அதைத் தொழுவதாக எங்களுக்குச் செய்தி வந்துள்ளது; ஆனால், நபி (ஸல்) அவர்கள் அதைத் தடை செய்திருக்கிறார்கள் என்று எங்களுக்குத் தகவல் எட்டியுள்ளதே' என்றும் அவரிடம் சொல்" என்று கூறினர். மேலும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "நானும் உமர் (ரலி) அவர்களும் அந்த இரண்டு ரக்அத்களைத் (தொழுபவர்களைத்) தடுத்து அடிப்பது வழக்கம்" என்றும் கூறினார்கள்.

குறைப் அவர்கள் கூறினார்கள்: "நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, அவர்கள் என்னை அனுப்பி வைத்த செய்தியைத் தெரிவித்தேன். அதற்கு ஆயிஷா (ரலி), 'உம்மு ஸலமாவிடம் கேள்' என்று கூறிவிட்டார்கள். நான் (என்னை அனுப்பியவர்களிடம் திரும்பிச் சென்று) விஷயத்தைக் கூறினேன். அவர்கள் என்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் அனுப்பிய அதே செய்தியைக் கொடுத்து, உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் அனுப்பினார்கள்."

உம்மு ஸலமா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்:
"நபி (ஸல்) அவர்கள் அவ்விரண்டு ரக்அத்களைத் தடுப்பதை நான் செவியுற்றிருக்கிறேன். (ஆனால் ஒருமுறை) அவர்கள் அஸர் தொழுதுவிட்டு என்னிடம் வந்தார்கள். என்னிடம் பனூ ஹராம் குலத்தைச் சார்ந்த அன்சாரிப் பெண்கள் சிலர் இருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவ்விரண்டையும் தொழுதார்கள். நான் பணிப்பெண்ணை அவர்களிடம் அனுப்பி, 'நீ அவர்களுக்குப் பக்கத்தில் நின்று, "உம்மு ஸலமா கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதரே! இந்த இரண்டு ரக்அத்களைத் தொழுவதை தாங்கள் தடுப்பதை நான் கேட்டிருக்கிறேன். ஆனால், தாங்களே அதைத் தொழுவதை நான் பார்க்கிறேனே?" என்று கேள். அவர்கள் தமது கையால் சைகை செய்தால் (பேசாமல்) சற்றே விலகி நில்' என்று கூறினேன்.

அப்பெண்ணும் அவ்வாறே செய்தார். நபி (ஸல்) அவர்கள் தமது கையால் சைகை செய்தார்கள். அப்பெண் அவர்களிடமிருந்து விலகி நின்றார். நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும், 'அபூ உமைய்யாவின் மகளே! அஸருக்குப் பின்னுள்ள இரண்டு ரக்அத்கள் பற்றிக் கேட்டாய். அப்துல் கைஸ் கூட்டத்தார் தங்கள் சமூகத்தாரின் இஸ்லாம் ஏற்பு விஷயமாக என்னிடம் வந்திருந்தனர். அவர்கள் லுஹருக்குப் பின்னுள்ள இரண்டு ரக்அத்களைத் தொழ விடாமல் என்னை (வேலையில்) ஈடுபடுத்திவிட்டனர். அந்த இரண்டு ரக்அத்களே இவை' என்று கூறினார்கள்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1273சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ بُكَيْرِ بْنِ الأَشَجِّ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ أَزْهَرَ، وَالْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، أَرْسَلُوهُ إِلَى عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالُوا اقْرَأْ عَلَيْهَا السَّلاَمَ مِنَّا جَمِيعًا وَسَلْهَا عَنِ الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ وَقُلْ إِنَّا أُخْبِرْنَا أَنَّكِ تُصَلِّينَهُمَا وَقَدْ بَلَغَنَا أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْهُمَا ‏.‏ فَدَخَلْتُ عَلَيْهَا فَبَلَّغْتُهَا مَا أَرْسَلُونِي بِهِ فَقَالَتْ سَلْ أُمَّ سَلَمَةَ ‏.‏ فَخَرَجْتُ إِلَيْهِمْ فَأَخْبَرْتُهُمْ بِقَوْلِهَا فَرَدُّونِي إِلَى أُمِّ سَلَمَةَ بِمِثْلِ مَا أَرْسَلُونِي بِهِ إِلَى عَائِشَةَ فَقَالَتْ أُمُّ سَلَمَةَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَنْهَى عَنْهُمَا ثُمَّ رَأَيْتُهُ يُصَلِّيهِمَا أَمَّا حِينَ صَلاَّهُمَا فَإِنَّهُ صَلَّى الْعَصْرَ ثُمَّ دَخَلَ وَعِنْدِي نِسْوَةٌ مِنْ بَنِي حَرَامٍ مِنَ الأَنْصَارِ فَصَلاَّهُمَا فَأَرْسَلْتُ إِلَيْهِ الْجَارِيَةَ فَقُلْتُ قُومِي بِجَنْبِهِ فَقُولِي لَهُ تَقُولُ أُمُّ سَلَمَةَ يَا رَسُولَ اللَّهِ أَسْمَعُكَ تَنْهَى عَنْ هَاتَيْنِ الرَّكْعَتَيْنِ وَأَرَاكَ تُصَلِّيهِمَا فَإِنْ أَشَارَ بِيَدِهِ فَاسْتَأْخِرِي عَنْهُ ‏.‏ قَالَتْ فَفَعَلَتِ الْجَارِيَةُ فَأَشَارَ بِيَدِهِ فَاسْتَأْخَرَتْ عَنْهُ فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏ ‏ يَا بِنْتَ أَبِي أُمَيَّةَ سَأَلْتِ عَنِ الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ إِنَّهُ أَتَانِي نَاسٌ مِنْ عَبْدِ الْقَيْسِ بِالإِسْلاَمِ مِنْ قَوْمِهِمْ فَشَغَلُونِي عَنِ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ بَعْدَ الظُّهْرِ فَهُمَا هَاتَانِ ‏ ‏ ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் மவ்லாவான குரைப் அறிவித்தார்கள்:

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி), அப்துர் ரஹ்மான் இப்னு அஸ்ஹர் (ரழி) மற்றும் அல்-மிஸ்வர் இப்னு மக்ரமா (ரழி) ஆகியோர் தன்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியான ஆயிஷா (ரழி) அவர்களிடம் அனுப்பினார்கள். அவர்கள் கூறினார்கள்: எங்கள் அனைவரின் சார்பாக அவர்களுக்கு ஸலாம் கூறி, அஸர் தொழுகைக்குப் பிறகான இரண்டு ரக்அத்களைப் பற்றி அவர்களிடம் கேளுங்கள். மேலும், அவர்கள் அதைத் தொழுவதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைத் தடை செய்தார்கள் என்று எங்களுக்குக் கூறப்பட்டுள்ளது என்றும் அவர்களிடம் சொல்லுங்கள். நான் அவர்களிடம் சென்று, அவர்கள் என்னை எதற்காக அனுப்பியிருந்தார்களோ அதை அவர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் கூறினார்கள்: உம்மு ஸலமா (ரழி) அவர்களிடம் கேளுங்கள். நான் அவர்களிடம் (இப்னு அப்பாஸ் (ரழி) மற்றும் மற்றவர்களிடம்) திரும்பி வந்து, அவர்களின் கருத்தை அவர்களுக்குத் தெரிவித்தேன். ஆயிஷா (ரழி) அவர்களிடம் என்னை அனுப்பிய அதே பணிக்காக அவர்கள் என்னை மீண்டும் உம்மு ஸலமா (ரழி) அவர்களிடம் அனுப்பினார்கள். உம்மு ஸலமா (ரழி) கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைத் தடை செய்வதை நான் கேட்டிருக்கிறேன், ஆனால் பின்னர் அவர்கள் அதைத் தொழுவதை நான் கண்டேன். அவர்கள் அதைத் தொழுதபோது, அவர்கள் அஸர் தொழுகையைத் தொழுதிருந்தார்கள். பிறகு, (என் வீட்டிற்குள்) நுழைந்தார்கள். அன்சாரிகளைச் சேர்ந்த பனூ ஹராம் கோத்திரத்தைச் சேர்ந்த பல பெண்கள் என்னுடன் அமர்ந்திருந்தபோது அவர்கள் இந்த இரண்டு ரக்அத்களையும் தொழுதார்கள். நான் ஒரு அடிமைப் பெண்ணை அவர்களிடம் அனுப்பி, அவளிடம் கூறினேன்: அவர்களுக்கு அருகில் நின்று, ‘அல்லாஹ்வின் தூதரே, நீங்கள் இந்த இரண்டு ரக்அத்களை (அஸர் தொழுகைக்குப் பிறகு) தடை செய்வதை நான் கேட்டேன், ஆனால் நீங்களே அதைத் தொழுவதை நான் காண்கிறேன்’ என்று உம்மு ஸலமா (ரழி) கேட்கிறார்கள் என்று அவர்களிடம் சொல். அவர்கள் தம் கையால் சைகை செய்தால், அவர்களிடமிருந்து பின்வாங்கி விடு. அந்த அடிமைப் பெண் அவ்வாறே செய்தாள். அவர்கள் (கையால்) சைகை செய்தார்கள், எனவே அவள் அவர்களிடமிருந்து பின்வாங்கினாள். அவர்கள் தொழுகையை முடித்ததும், கூறினார்கள்: அபூ உமைய்யாவின் மகளே, அஸர் தொழுகைக்குப் பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுவதைப் பற்றி நீங்கள் கேட்டீர்கள். உண்மையில், அப்துல் கைஸ் கோத்திரத்தைச் சேர்ந்த சிலர் தங்கள் மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட செய்தியுடன் என்னிடம் வந்திருந்தார்கள். (அவர்களுடன் பேசியதால்) லுஹர் தொழுகைக்குப் பிறகான இரண்டு ரக்அத்களைத் தொழுவதிலிருந்து அவர்கள் என்னை தடுத்துவிட்டார்கள். (அஸர் தொழுகைக்குப் பிறகு நான் தொழுத) அவை அந்த இரண்டு ரக்அத்கள்தான்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)